கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய கோரி கையெழுத்து வேட்டை...


க.கிஷாந்தன்-

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய கோரி ஐம்பதாயிரம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, 10.12.2016 அன்று சனிக்கிழமை நுவரெலியா – இராகலை பகுதியில் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் மேற்படி கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

க்கையின் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் தோட்ட தொழிலாளர்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் இதனை சர்வதேச தொழில் ஸ்தாபனத்திற்கு அழுத்தமாக கொண்டு செல்லும் முகமாகவும், உச்ச நீதிமன்றத்தில் இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளதாக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -