இனிமேல் மோடியின் நாடகம் மக்களிடம் எடுபடாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நான் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. எனவேதான் மக்கள் சபையில் பேச நான் முடிவு செய்து இருக்கிறேன்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன்” என்றார்.

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

மோடி அவர்களே, உங்களது நாடகத்தனமான வசனங்களை கேட்டு நாட்டு மக்கள் களைப்படைந்து விட்டனர். நாடக வசனங்கள் இனி மக்களிடம் எடுபடாது.

எனவே பாராளுமன்றத்துக்கு வந்து அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -