இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: வீராட் கோலி இரட்டை சதம்

ந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்டே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன் எடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய், கேப்டன் வீராட்கோலி ஆகியோர் சதம் அடித்தனர். முரளி விஜய் 136 ரன்னில் அவுட் ஆனார்.

நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 451 ரன் குவித்தது. வீராட்கோலி 147 ரன்னுடனும், ஜெயந்த் யாதவ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. வீராட்கோலியும் ஜெயந்த்யாதவும் தொடர்ந்து விளையாடினார்கள்.

இருவரும் துரிதமாக ரன் சேர்க்கும் விதமாக ஆடினர். கோலி 246 பந்துகளில் 150 ரன்னை கடந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் இருந்த ஜெயந்த் யாதவ் அரை சதம் அடித்தார்.

3-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2-வது அரை சதமாகும். இதற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் அரை சதம் அடித்து இருந்தார். நேற்று பொறுமையாக விளையாடிய கோலி இன்று அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். பவுண்டரிகளாக விளாசி ரன்கள் சேர்த்தார்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ரன் குவித்து வருகிறது. 153-வது ஓவரில் 500 ரன்னை எடுத்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீராட் கோலி 302 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 53-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது இரட்டை சதமாகும்.

இதற்கு முன்பு நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்த ஆண்டிலேயே இரட்டை செஞ்சுரி அடித்து இருந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 558 ஆக இருந்தது.

மறுமுனையில் இருந்த ஜெயந்த் யாதவும் சதத்தை நோக்கி சென்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -