பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் அழைப்பு..!

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலபை பகுதியில் வசிக்கும் மூன்று பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த மனுவொன்றை பரிசீலனை செய்த பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலபை பகுதியில் 2 ஏக்கர் சதுப்பு நிலத்தை முறைப்படி நிரப்பாமல் இராணுவ அதிகாரிகளுக்கான வீட்டு தொகுதியொன்று நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அது பொது மக்களுக்கு பாதிப்பாகும் என குறிப்பிட்டு மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -