அநீதிகளுக்கு ஜனாதிபதி,பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் செயற்­பா­டு­களை உடன் நிறுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் முதல் அனை­வரும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார். 

ஆலோ­சனை மற்றும் நல்­லி­ணக்கப் பேரவை (ARC) கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு – மரு­தானை சாஹிரா கல்­லூரி பள்­ளி­வா­ச­லுக்கு எதிரில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘இலங்கைத் தாய்க்கு பிரார்த்­தனை’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான துஆ பிரார்த்­த­னையில் கலந்து கொண்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். 

இலங்­கையின் சமா­தான சக­வாழ்­வுக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் இன நல்­லி­ணக்­கத்­துக்கும் நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக இந்த ‘இலங்கைத் தாய்க்­கான பிரார்த்­தனை' அரபு மொழி­யிலும் சிங்­கள மொழி­யிலும் நடாத்­தப்­பட்­டது. வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கை­யை­ய­டுத்து பள்­ளி­வா­ச­லுக்கு வெளியில் நடை­பெற்ற இப்­பி­ரார்த்­தனை நிகழ்வில் நூற்­றுக்­க­ணக்­கானோர் கலந்து கொண்­டனர். 

அங்கு தொடர்ந்தும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கருத்து தெரி­விக்­கையில் 

‘தற்­போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான பௌத்த கடும்­போக்கு வாதி­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்­துக்கும் தாய்­நாட்­டுக்கும் ஏதும் ஆபத்­துகள் ஏற்­ப­டக்­கூ­டாது என்றே அல்­லாஹ்­விடம் இந்தப் பிரார்த்­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளையும் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும். சட்டம் அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக அமுல் நடத்­தப்­பட வேண்டும் என்றார். 

சுமார் 45 நிமிட நேரம் துஆ பிரார்த்­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடும் போக்­கு­வாத சிங்­கள அமைப்­புகள் செயற்­பட முயற்­சிக்கும் போதெல்லாம் ஆலோசனைக்கும் இன நல்லிணக்கத்துக்குமான பேரவை (ARC) துஆ பிரார்த்தனைகளை சிங்கள மொழியில் மேற்கொள்ளுமென அதன் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -