நுவரெலியா கல்விக்கோட்டத்தில் ஐந்து வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிடம்

க.கிஷாந்தன்-

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று அக்கரப்பத்தனை தொன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் சிவஸ்ரீதரன் தலைமையில் 11.12.2016 அன்று நடைபெற்றது. 

150 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மத்திய மாகாண விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு மீன்பிடி, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனினால் 11.12.2016 அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -