குர்-ஆனில் சந்தேகம்: அதற்காகத்தான் ACJUஉடன் விவாதம்: அவர்கள் தயாரா?? ஞானசார

ஜம்மியதுல் உலமா சபைக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.இன்று அவ்வமைபின் தலைமையகத்தில் இடன்பெற்ற ஊடக சந்திப்பில் ஜம்மியதுல் உலமா கடிதம் தொடர்பில் ஊடகவியளாலர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர் அவர் கருத்து தெரிவிக்கையில்...

முஸ்லீம்கள் தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அந்த முஸ்லீம்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் தொடர்பில் எமக்கு பல சந்தேகங்கள் உள்ளன.முஸ்லீம்களின் வாழ்க்கையின் முழு மூச்சி மூச்சு இஸ்லாம் என்பதால் எமக்கு இஸ்லாம் தொடர்பில் இருக்கும் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும்.முஸ்லீம்கள் ஐந்துவேளை தொழுகிறார்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாயலில் ஒன்று கூடுகிறார்கள்.அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் மார்க்கமே முக்கிய சிந்தனையாக உள்ளது அதுதான் இங்குள்ள பிரச்சினை.

அல் குரானில் உள்ள சில வசனங்களின் விளக்கங்களையே நாம் உலமா சபையில் கேட்டுள்ளோம்.அந்த வசனங்களால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் எம்மோடு கலந்துரையாடவே நாம் அழைத்துள்ளோம். 

நாம் சுட்டிக்காட்டியுள்ள குரான் வசனங்களை அவர்கள் ஆதரிக்கிறார்களா அல்லது புறக்கணிப்பு செய்கிறார்களா என்பது தொடர்பில் எமக்கு விளக்கமளிக்கவும் நாம் சுட்டிக்காட்டியுள்ள குரான் வசனங்களால் எதிர்காலத்தில் எமக்கு பாதிப்புகள் ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாம் விளக்கம் கேட்கிறோம். அதனால் இந்த விடயத்தை நாம் விவாதித்து தீர்த்துக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -