80 வருட பாடசாலை வரலாற்றினை மாற்றிய மாணவன்..!

ண்பது வருட பாடசாலை வரலாற்றினை மாற்றிய மாணவனுக்கு Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பின் உறுப்பினர்கள் குறித்த மாணவனின் வீட்டிற்கு சென்று இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/ககு/ நாசிவன்தீவு அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் திலிப்குமார் சனுஜன் என்ற மாணவன் 164 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

மேலும், பாடசாலை ஆரம்பித்து 80 வருடங்கள் கழிந்த நிலையில் மேற்படி மாணவன் முதல் தடைவையாக இப் பரீட்சையில் தகைமை பெற்று சித்திபெற்றிருந்தார்.

அவரது பெற்றோருடன் மாணவன் எதிர்கால கல்வி வளர்ச்சி பற்றி கலந்துரையாடியதுடன், மாணவனுக்கு தேவையான பயிற்சிப்புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ரமணன் ராம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -