திருமண விழா ஒன்றில் பங்கேற்க சென்ற வாகனம் விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்

ந்தியா: ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்ட தலைநகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹர்ஷன் மோட் என்ற இடத்தில் நேற்றிரவு வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பலமு மாவட்டம் லெஸ்லிகஞ்ச் பகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்தபோது விபத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோசமான சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தாறுமாறாகச் சென்றதால் மரத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜார்க்கண்ட் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -