காட்டுப் பகுதியில் காணாமல் போனோர் 5 பேரையும் தேடும் பணி தொடர்கிறது..

க.கிஷாந்தன்-

ஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவரை பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் 5 குழுக்களாக பிரிந்து தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

12.12.2016 அன்று திங்கட்கிழமை இரவு முதல் காணாமால் போன இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், இவர்களை வழிகாட்ட சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளி மா. கிருஷ்ணசாமி ஆக ஐவர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், இதில் 2 பெண்கள் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

12.12.2016 அன்று இரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரும் அதிரடைப் படையினரும் ஐந்து குழுக்களாக பிரிந்துச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -