முதலமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு 54 வயது நபர் உயிரிளப்பு

சீகிரிய – சீகிமுல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல் ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டியில் பயணித்த மெல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பயணித்த ஜுப் வண்டி குறித்த முச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதுண்டுள்ளமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேஷல் ஜயரத்னவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -