சுடர் ஒளியின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி ”ஒளி சுமந்த வலி” சிறப்பு மலர் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) கிழக்கு மாகாண முதலமைச்சரின் திருகோணமலை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த சிறப்பின் மலர்களை கிழக்கு மாகாண முலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத், முதலமைச்சரின் ஊடகச் செயலாளரும் இம்போட் மிரர் இணையத்தளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் முதலமைச்சரின் ஊடகப் பிரிவின் ஊடகவியலாளர் முஹம்மட் மௌசும் ஆகியோர்களுக்கு இந்த ”ஒளி சுமந்த வலி” சிறப்பு மலர் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த ”ஒளி சுமந்த வலி” சிறப்பு மலரினை கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்பாளரும், ஊடகவியலாளருமான பைஷல் இஸ்மாயில் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், ஜே.லாஹிர், சிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


