காங்கேனோடை ஆற்றங்கரை சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு..!

ஆதிப் அஹமட்- 
ண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட காங்கேனோடை பிரதேசத்தில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பெயரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் இவ்வேலைத் திட்டத்திற்காக ரூபா முப்பது இலட்சத்தை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்துள்ளார். 

மண்முனைப்பற்று பிரதேச சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மேற்படி வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காங்கேனோடை அமைப்பாளருமான ஏ.ஏ.மதீன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அடிக்கல்லினை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை உள்ளிட்ட பிரமுகர்கள் நட்டி வைத்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -