நான் எனும் நீயும் நீ எனும் நானும்

ருதமுனையில் நடைபெற்ற 'இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா' மேடையில் கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களது 'நான் எனும் நீ' கவிதை நூல் மீள் வெளியீடு செய்யப்பட்டது. அந்நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை இது.

கவிஞர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் 'நான் எனும் நீ' எனும் தலைப்பில் 1996 இல் ஒரு கவிதை எழுதினார். கவிஞர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 'நீ எனும் நான்' எனும் தலைப்பில் 1998 இல் ஒரு கவிதை எழுதினார்.

'நான் எனும் நீ'
'நீ எனும் நான்'
இந்த இரண்டு கவிதைத் தலைப்புக்களையும் முன் வைத்து எழுதப்பட்ட கவிதை இது.


நான் எனும் நீயும்
நீ எனும் நானும்
================

'நான் என்னும் நீ'
என்றார் அஸ்ரஃப்
'நீ என்னும் நான்'
என்றார் ஹக்கீம்

நான் நீயாக முடியுமா?
என்றார் அஸ்ரஃப்
நீயாக நான் ஆவேன்
என்றார் ஹக்கீம்

நான் நானேதான்
என்றார் அஸ்ரஃப்
நீ நானும் தான்
என்றார் ஹக்கீம்

நான் ஆகி நீ ஆகி நாமாவோம்
என்றார் அஸ்ரஃப்
நாம் ஆகி நமதாகி நலமாவோம்
என்றார் ஹக்கீம்

நமதாகி வளமாகி களமாவோம்
என்றார் அஸ்ரஃப்
களமாகி குலமாகி பலமாவோம்
என்றார் ஹக்கீம்

பலமாகி பணியாகி கனியாவோம்
என்றார் அஸ்ரஃப்
கனியாகி கருவாகி மரமாவோம்
என்றார் ஹக்கீம்

மரமாகி நிழலாகி மனையாவோம்
என்றார் அஸ்ரஃப்
மனையாகி துணையாகி இணையாவோம்
என்றார் ஹக்கீம்

இணையாகி அணையாகி
இருவரும் ஒருவராகி
பிணையாவோம் என்றார் அஸ்ரஃப்

பிணையானார் முனையானார்
பிடிப்பானார் துடிப்பானார்
படிப்பானார் அப்பெரியார்கள்
அஸ்ரஃப் ஹக்கீம் பெயர் வாழி!
அவரிருவர் குறி வளர்க நீழி!

கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -