இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அதிக விலையுடனான காரின் உரிமையாளர் தொடர்பில் தகவல் வெளியானது இலங்கைக்கு இதுவரை கொண்டு வரப்பட்ட அதிக விலையுடனான Rolls Royce Wraith வாகனம் தற்போது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வரி செலுத்திய பின்னர் அந்த வாகனத்தின் பெறுமதி 158 மில்லியனாகும்.
இந்த வாகனத்தை மெல்வா கூட்டு வர்த்தகத்தின் உரிமையாளரே கொள்வனவு செய்துள்ளதாக இணையத்தளத்தில் தற்போது வரையில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வரவாற்றில் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் அதிக விலையுடனான அதி சொகுசு Rolls Royce Wraith வாகனம் நேற்று சுங்க பிரிவினால் 93.8 மில்லியன் செலுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டது.
ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து வந்த Thalassa Patris என்ற சரக்கு கப்பல் மூலம் இலக்கம் HJCU4977026 என்ற கொள்கலனில் இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த வாகனம் இரண்டு கதவுகளை கொண்ட வாகனமாகும். இதன் வேகம் எட்டு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.