பிரதி அமைச்சர் ஹரீஸூக்கும் தமிழ்பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்..!

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
ல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கல்முனை தமிழ்பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளான கல்முனை மாநகர சபை முன்னாள்உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (03) சனிக்கிழமை கல்முனைமாநகர சபையில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கல்முனை மாநகர சபைஉறுப்பினர்களான வீ.கமலதாசன், ஏ.விஜயரட்னம், எஸ்.ஜெயக்குமார், கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களானநௌபர் ஏ.பாவா, கே.எல்.தௌபீக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாண்டிருப்பு, பெரிய நீலாவணை,சேனைக்குடியிருப்பு பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி, உட்கட்டமைப்புஅபிவிருத்திகள், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸின் விசேட அழைப்பின் பேரில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்; கலந்து கொண்டு தமிழ் பிரதேசவைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது விரிவாககலந்துரையாடப்பட்டது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -