யாழ் முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றத்தில் மக்கள் அதீத ஈடுபாடு..!

பாறுக் ஷிஹான்-
யாழில் மீண்டும் மீளக்குடியேறி வாழ விரும்பும் முஸ்லிம் மக்களிற்கான காணி வீடமைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (7) யாழ் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது . இன்று காலை 08.30 மணியளவில் இபப்திவுகள் கிராம சேவகர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொள்ளப்படடன.

அத்துடன் வீடு புனரமைப்பு புதிய வீட்டுத்திட்டம் போன்ற பதிவுகளும் இங்கு மேற்கொள்வதற்கு வசதிகளை பிரதேச செயலகம் அம்மக்களிற்கு ஒழுங்கு செய்துள்ளது. தூர பகுதிகளில் இருந்து தற்போது 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த வாகனங்கள் பேருந்துகளில் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கான வழிகாட்டல்களை பல்வேறு தரப்புகளும் போட்டிபோட்டுக்கொண்டு மேற்கொண்டு வருகின்றன.

இம்மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமிம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -