பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் மாணவிகளுக்கிடையில் முறுகல்..!



க.கிஷாந்தன்-
த்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவிகளில் இரு குழுக்களுக்கிடையில் 26.09.2016 அன்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாய்தர்க்கங்களுடாக இடம்பெற்றதாக கூறப்படும் இந்த முறுகல் நிலைமை கல்லூரியின் மாணவிகள் உள்ளக பிரச்சினையாக கருதப்படுவதாக கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்வியற் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு இனங்களுக்கான மாணவிகள் 25.09.2016 அன்று மாலை முதல் அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் மாணவிகளுக்கிடையிலான பகடிவதைகள் தொடர்பிலேயே இந்த வாய்தர்க்கமும் முறுகல் நிலைமையும் ஏற்பட்டிருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பில் மாணவிகளுக்கிடையில் விசாரணைகள் மேற்கொண்டதாகவும், இவர்களுக்கிடையில் சமதானத்தை உருவாக்கியிருப்பதாகவும் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -