க.கிஷாந்தன்-
நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் 22.09.2016 அன்று வியாழக்கிழமை காலை குளவி கொட்டுக்குள்ளான நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தரம் 8,9,11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 மாணவர்களில் 10 மாணவர்களும், 10 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகளே, இவ்வாறு கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.