பைஷல் இஸ்மாயில் –
மட்டக்களப்பு, காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற மாபெரும் இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் சுமார் 2028 பேர் வைத்திய சேவையை பெற்றுக்கொண்டதாக நிந்தவுர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இன்று (22) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சின் இணைப்புச் செயலாரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபினின் வேண்டுகோளின் பேரில் சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிமின் வழிகாட்டலின் கீழ் இந்த மாபெரும் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் கடந்த திங்கட்கிழமை (19) மற்றும் செவ்வாய்கிழமை (20) நடைபெற்றது.
இதில் அக்கு பஞ்சர் வைத்திய சிகிச்சையை 370 பேரும், பஞ்ச கர்ம சிகிச்சையை 300 பேரும், பொது வைத்திய கண், காது, வாதம் போன்ற சிகிச்சைகளை 1063 பேரும் பெற்றுக்கொண்டதாகவும், இதில் 295 பேருக்கு முழுமையான உடற் பரிசோதனையை முதற்கடவையாக முற்றிலும் இலவசமாக நிந்தவுர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சேவைக்கு சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.சிறிதர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வேசவைகள் பணிப்பாளர் வைத்தியர் கிரேஷ் உள்ளிட்ட பல ஆயுர்வேத வைத்தியர்களும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த மாபெரும் ஆயுர்வேத வைத்திய சேவையில் சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கோரியா நாட்டு வைத்திய நிபுணர்களுக்கு நிந்தவுர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.