15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட எழுச்சி மாநாடு..!

சாய்ந்தமருது எம்.எஸ்.எம். சாஹிர்-
ராபிததுல் அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (24)அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விசேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இடம் பெற்றது. 

தென் இந்தியாவிலிருந்து வருகை தந்த சர்வதேச அழைப்பாளர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி “நபிகளாரின் அழுகை தரும் படிப்பினைகள்” எனும் தலைப்பில் உருக்கமான விசேட மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அத்தோடு, பிரபல உள்ளூர் சொற்பொழிவாளர்களான மௌலவி முபாரக் (மதனி) “முஸ்லிம் உலகம் சந்திக்கும் பித்னாக்களும் அதை எதிர்கொள்ளும் வழிகளும்” எனும் தலைப்பிலும், மௌலவி அபூபக்கர் சித்தீக் (மதனி) “அல்லாஹ்வின் அன்பும், பெறுவதற்கான வழிகளும்” எனும் தலைப்பிலும், மௌலவி இஸ்மாயில் (ஸலபி) “தவறாகப் புரியப்பட்ட தவ்ஹீத்” எனும் தலைப்பிலும், மௌலவி றயீஸுதீன் (ஷரயீ) “தவறான பொருளீட்டலும் தவிர்ப்பதற்கான வழிகளும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில் 15,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மௌலவி அப்துல் பாஸித் புஹாரி உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -