கிழக்கில் இராணுவ முகாம் அகற்றல் செய்தி உண்மையில்லை - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 64 இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லையென பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று வெளியான செய்தியில், 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் 162 முகாம்கள் காணப்பட்டன என்றும், இதனை ஆகஸ்ட் 31 ஆகும் போது 98 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -