க.கிஷாந்தன்-
லிந்துலை மெராயா மிளகுசேனை தோட்டத்தில் 30 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகள் இல்லாமல் தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் வீட்டின் கூரைக்கு தகரம் போடப்படாமல் கறுப்பு றபர் சீட்டுகள் மாத்திரமே போட்டுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் இவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 130 கூரை தகடுகள் அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமாரினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.