நடமாடும் சேவையில் முஸ்லீம் மக்களை சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்...!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றத்திற்கான விஷேட நடமாடும் சேவையில் கலந்து கொண்ட முஸ்லீம் மக்களை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தித்துள்ளார்.

இன்று 20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஆரம்பமான இவ்விசேட நடமாடும் சேவையில் வெளிமாவட்டங்களில் வசிக்கும் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்கள் அதிகளவாக கலந்து கொண்டனர்.
இதன் போது அங்கு நண்பகல் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் யாழ் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன்மற்றும் அரச அதிகாரிகள் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

பாராளுமன்ற உறுப்பினருடன் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் மக்கள் பணிமனை தலைவர் பி.எம்.எஸ் சுபியான் மௌலவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் தகவல் வழிகாட்டல் நிலைய இணைப்பாளர் எம்.நிபாஹீர் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.கே.சுவர்ஹான் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த விஜயத்தின போது புதிய மீள்குடியேற்றப் பதிவுகள் காணி அற்றோர் காணிகளை கோருவதற்கான பதிவுகள் வீட்டுத்திட்டத்திற்கான பதிவுகள் ஆகியவற்றுடன் வாழ்வாதார உதவிகளுக்கான பதிவுகள் தொடர்பாக குறித்த உயர் அதிகாரிகளுடன் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -