பாறுக் ஷிஹான்-
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில்
அஸ்மின் போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதிகளின் கருத்து வடக்கு முஸ்லிம்களை வேதனையடையச் செய்கின்றது என யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான பி.எம் சுபியான் மௌலவி தெரிவித்தார்.
அண்மையில் யாழிற்கு வந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களிடம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது' என்று தெரிவித்து வருகின்றார்.
இதனை நான் கண்டிப்பதுடன் தமிழ்க் கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் மூலம் அக்கட்சியினால் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அய்யூப் அஸ்மின் தனது விசுவாசத்தை தலைமைகளுக்கு காட்டுவதற்காக முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர்இ இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது இவ்வாறாக அரசியல் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனமான கருத்தை அய்யூப் அஸ்மீன் கூறியுள்ளார்.
இனரீதியான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து அதனை தமிழர்களின் அரசியல் ரீதியான விடுதலைக்கான போராட்டமாக மாற்றிய புலிகள் வடக்கு முஸ்லிம்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே பலவந்தமாக வெளியேற்றியமை யாவரும் அறிந்த உண்மை.
வடக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான உத்தரவாதமும் தகுந்த பாதுகாப்பும் அப்போது கிடைத்திருந்தால் அவர்கள் இன்று தென்னிலங்கையில் நாடோடிகளாகவும்இஅகதிகளாகவும் அலையமாட்டார்கள்.
புலிகள் இவ்வாறான பாதகச்செயலை எப்போது மேற்கொண்டார்களோ அன்றிலிருந்தே வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தேசிய இனப்பிரச்சினையின் முக்கிய பகுதியாகி விட்டது.
எனினும் தமிழ்த் தலைமைகளோ தமிழர்களுக்காக பரிந்து பேசும் சர்வதேசமோ தமிழர்களின் விடிவுக்காக உழைத்து வரும் புலம்பெயர் தமிழர்களோ அகதி முஸ்லிம்களின் பிரச்சினையை இன்னும்கண்ணீர் துடைப்பாகவே எடுக்கின்றன.
இதனை தெரிந்தும் தெரியாதது போன்று நடிக்கின்ற அய்யூப் அஸ்மின் போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதிகளின் கருத்து வடக்கு முஸ்லிம்களை வேதனையடையச் செய்கின்றது.
இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் வடபுல முஸ்லிம்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவுமில்லைஇ அவர்களின் அபிலாசைகள் கருத்திற்கெடுக்கப்படவுமில்லை என்பது வேதனையான விடயம்.
நல்லிணக்க ஆணைக்குழு வடபுல முஸ்லிம்கள் தொடர்பில் கூறியிருக்கும் பரிந்துரைகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையாக சித்தரிப்பவர்களுக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் போன்றவர்கள்துணை போகக் கூடாது.
இவரது இந்தக் கருத்து வெந்துபோயிருக்கும் முஸ்லிம்களை மேலும் நோகச் செய்துள்ளது என்றும் மௌலவி பி.எஸ் எம் சுபியான் தெரிவித்துள்ளார்.
