வீதி அபிவிருத்தி நிகழ்வில் முன்னால் வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையின் உரை

எம்.ஜே.எம்.சஜீத்-

க்கள் நன்மை பெறும் வகையில் அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்
மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை தெரிவிப்பு
இறைவன் நாடுபவர்களுக்கே அரசியல் அதிகாரங்கள் கிடைக்கின்றன. அரசியல் அதிகாரங்கள் கிடைக்கும் போது நமது மக்கள் நீண்ட காலமாக நன்மைகளை பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுத்தும் போதுதான் இறைவனின் அருள் எமக்கு கிடைக்கும் என கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் ஊடாக அட்டாளைச்சேனை கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர் தலைமையில் அண்மையில் (16) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் 30வருட கால யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிப்படைந்த கிழக்கு மாகாண வீதிகளை புணரமைத்து மக்களிடம் கையளிக்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தில் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மூவின மக்கள் வாழும் பிரதேசங்களின் வீதி ;அபிவிருத்திப் பணிகளை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக எமக்கு கிடைத்த அதிகாரத்தினூடாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வீதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இப்பிரதேச வீதி அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்து மக்களிடம் கையளித்தள்ளோம்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான அட்டாளைச்சேனை கடற்கரை வீதிக்கு இந்த வருடம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியிலிருந்து நிதி ஒதுக்க வேண்டும் என 2016ம் ஆண்டின் வரவு – செலவு திட்டம் கிழக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இவ்வீதியிலேதான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வீடும் உள்ளது எனவும் குறிப்பிட்டேன். 

எனவே எங்களது இருவரினதும் வேண்டுகோளுக்கினங்கவே இந்த வீதிக்கு நிதி ஒதுக்கப்பட்டு இன்று காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாண வீதி அபிவிருதி அமைச்சர் ஆரியவதி கலப்பதி அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். நேற்று அக்கரைப்பற்று நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஆரியவதி கலப்பதி முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது எங்களுக்கு சிறு நிதி தந்து விட்டு இப்பகுதிகளுக்கு அதிகமான நிதியினை வழங்கி வீதிகளை அபிவிருத்தி செய்துள்ளார் என தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்திற்கு நிதிகளை வழங்கி என்னாலான உதவிகளைச் செய்துள்ளேன் இதனூடாக மூவின மக்களும் நன்மையடைந்துள்ளனர். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த சந்தரப்பம் கிடைத்தது. திரியாய், குச்சவெளி வீதி 23கிலோமீற்றர் தூரத்தில் பல கோடி நிதயில் காபட் வீதியாக புனரமைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நீண்டகால இடைவெளிக்குப்பின் அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இவ்வீதி ;அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸையும், தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் இலட்சியங்களையும் செயல்படுத்துவதற்கு தலைவரரோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டு வந்தோம். தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கு பிறகு கட்சியின் தலைவராக திருமதி பேரியல் அஷ்ரபா? றஊப் ஹக்கீமா? என்ற நிலமை வந்த போது கட்சிக்கு தலைவராக றஊப் ஹக்கீம்தான் தலைமை தாங்க வேண்டும் என வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தினோம். அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கி நமது மக்களின் நலனில் முடிந்தளவு அக்கரை காட்டி செயல்பட்டு வருகின்றோம்.

கட்சி ரீதியாக நாங்கள் வேறுபட்ட நிலையில் இருந்தாலும் நமது சமூகம் தொடர்பான விடயங்களில் தேசிய, மாகாண, மாவட்ட செயல்பாடுகளிலும் ஒற்றுமையாக கடந்த காலங்களில் செயல்பட்டும் குரல் கொடுத்தும் வந்துள்ளோம்.

அரசியல் ரீதியான பதவிகள் கிடைக்கும் போது நாங்கள் ஒருபோதும் பொறாமைப்படுவதில்லை. கடந்த காலங்களில் எனக்கும் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும் கிடைத்த அரசியல் அதிகாரங்களைப் பாவித்து முடிந்தளவு நல்ல பணிகளை செய்துள்ளோம். தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது மக்களின் நலனில் அக்கரை செலுத்தி நல்லவைகளைப் புரிய வேண்டும் என்பதே எமது அவாவாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -