நான் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப்­ப­கு­தி­யி­லேயே யுத்­தத்தின் மூன்று பங்கு நிறை­வ­டைந்து விட்­டது - சந்­தி­ரிகா

லங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தில் நான்கில் மூன்று பங்­கினை தானே நிறைவு செய்­துள்­ள­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எஞ்­சி­யி­ருந்த இறுதி ஒரு பங்­கினை மட்­டுமே நிறைவு செய்­த­தாகவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

மேலும் கடந்த அர­சாங்­கத்­தினால் சிதைந்த இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­ப வும் புத்­தெ­ழுச்சி பெற செய்­வ­தற்கும் ஐக்­ கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதில் எவ்­வி­த­மான தவறும் இல்லை எனவும் தெரி­வித்தார்.

மீரி­கம பகு­தியில் இடம்­பெற்ற மக்­கள சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நான் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப்­ப­கு­தி­யி­லேயே யுத்­தத்தின் மூன்று பங்கு நிறை­வ­டைந்து விட்­டது. மிகு­தி­யி­ருந்த சொட்ப பகு­தி­யி­னையே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நிறைவு செய்­தி­ருந்தார். அவ்­வா­றி­ருக்­கையில் சிலர் யுத்­தத்தை கடந்த அர­சாங்கம் நிறைவு செய்­த­மை­யி­னா­லேயே மீண்டும் ஆட்சி செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை மக்கள் வழங்­கினர் என்றும் யுத்­தத்தின் நாய­க­னாக முன்னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜ­பக்ஷ சித்­திரிக்­கவும் முனைந்­தனர்.

உண்­மை­யாக விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான யுத்­தத்தின் வெற்­றிக்கு ஐக்­கிய தேசிய கட்­சியும் ஒரு பங்கு வழங்­கி­யி­ருந்­தது. நான் ஆட்­சிக்கு வரும் முன்­னரும் அதற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் நான்கில் மூன்று பங்கு யுத்தம் நிறை­வு­பெற்று விட்­டது என்­பதை மக்கள் புரிந்­துக்­கொள்ள வேண்டும். நாம் மேற்­கொண்ட முயற்­சி­களின் பின்­னரே யுத்­தத்தை நிறைவு செய்ய அவரால் முடிந்­ததே தவிர தனித்து அவரால் யுத்­தத்தை ஒரு­போதும் வெற்­றிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அத்­தோடு யுத்­தத்­திற்­கான ஆயு­தங்­களை எமது அர­சாங்­கமே கொள்­வ­னவு செய்­தி­ருந்­தது.

எனவே நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் யார் வேண்டுமானாலும் இணைந்து செயற்பட தயாராக உள்ளேன். நாட்டின் நன்மைக்காக என்னை அர்ப்பணித்து செயற்பட தயாராகவுள்ளேன் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -