பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை சுலோகங்களை ஏந்தியவாறு மேற்கொண்டதன் பின்னர் கையெழுத்து வேட்டையையிலும் இன்று (27) காலை ஐந்து சந்திப்பகுதியில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக, தனது சுயநலனிற்காக பாவிப்பதாக குற்றம் சுமத்ததி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டமானது இன்று மாகாண சபை உறுப்பினர் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை நடாத்தவுள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வினை பகிஸ்கரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.