கல்முனை மாநகரத்துக்கு கொரியா நாட்டின், கொய்க்கா உயர் அதிகாரிகள் நட்புறவு விஜயம்



ஏ.எல்.எம்.ஷினாஸ்-

கொ
ரியா நாட்டின், கொய்க்கா உயர் அதிகாரிகள் மற்றும் ஆசியா மன்றத்தின் அதிகாரிகள் (05)கல்முனை மாநகரத்துக்கு நட்புறவு விஜயம் மேற்கொண்டு வருகை தந்தனர். இதன் போது மாநகர சபை, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பெளதீக ஆளணி வளங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். 

இதில் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி. தினேஷா டி சில்வா விக்ரமநாயக்க, பணிப்பாளர் கோப குமார் தம்பி, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன், மாநகர ஆணையாளர் ஜெ. லியாக்கத் அலி, கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

ஆணையாளர், வைத்திய அத்தியட்சகர் ஆகியேர் வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்தனர். மாநகர எல்லைக்குள் கொரியா நாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொய்க்கா வேலைத்திட்டங்களையும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -