மஹிந்த பிரதமர் ரணிலுக்கு அவசர தொலைபேசி அழைப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கூட்டு எதிர்க்கட்சியின் இறுதிக்கு கூட்டத்திற்கு மைதானம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று நண்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்வுகொண்ட மஹிந்த ராஜபக்ஷ, தமது பாதயாத்திரையின் இறுதிக்கு கூட்டத்தை நடத்த மைதானம் ஒன்றை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதை செவிமடுத்த பிரதமர் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்துவிட்டு பதில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பிரதமருக்கு, அவர்களுக்கு தேவையான முறையில் மைதானம் ஒன்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

அதற்கமைய காலி முகத்திடல் அல்லது கெம்பல் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது, பொரல்ல கெம்பல் மைதானத்தை மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் குறித்த மைதானத்தை வழங்க பிரதமர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -