ஷபீக் ஹுஸைன்-
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள உலமாக்கள், ஆசிரியர்கள, சமூக சேவையாளர்கள் மற்றும் கலை இலக்கியத்துறை, விளையாட்டுத் துறை போன்ற பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று ஆர்.எம்.ரியால் பவுண்டேஷன் (21) ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின்போது வாலந்தோட்ட முஸ்லிம் மகா வித்தியாலம், மபாகந்த முஸ்லிம் மகா வித்தியாலயம், சென் மேரிஸ் கல்லூரி மற்றும் சேலான் ப்ரிட்ஜ் அஸ்ஹர் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் போட்டோ கோப்பி இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.