அப்துல்சலாம் யாசீம்-
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால்- இலங்கையில் காணப்படும் ஆக்கிரமிக்கும் இனங்கள் தொடர்பான மாகாண ரீதியான ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி எதிர்வரும் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட வன அதிகாரி கலாநிதி வசந்த லியனகே தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 9 .00மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இப்பயிற்சிக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள்- சமூக சார் அமைப்புக்கள்- மற்றும் ஊடகங்களில் பணியாற்றுவோர்களிற்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஆக்கிரமிக்கும் இனங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியை வழங்குவதற்கு UNDPஆல் ஸ்கில்ஸ் இன்டர்னஷனல் நிறுவனமானது உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறி தமிழ் மொழி மூலம் மட்டும் நடைபெறவுள்ளதுடன் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 077-8825797 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.