குவைத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் புரிந்த 71 இலங்கையர்களைகுவைத்தில் வைத்து இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் உத்தரவிற்கிணங்க குறித்த இலங்கை பிரஜைகள் குழு பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில்தரையிறக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட 71 பேரில் 9 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 4 மற்றும் 6 வருடங்கள் குவைத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்துள்ளார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் இவ்வாறான காரணங்கள் காரணமாக 1,151 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 221 இலங்கையர்கள் பாதுகாப்பான வீடுகளில் இருந்து இவ்வாறு தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் கூறியுள்ளது.