65 ஆவது மாநாட்டின் பின்னர் பல ராஜபக்ஷாக்கள் கைது...?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டுக்குச் செல்வதை விடவும், FCID யிற்கு வந்து செல்வது நல்லது என ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிதி மோஷடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு இன்று வருகை தந்த அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

கடந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தில் பலரை சிறைப்படுத்தினர். பின்னர் நடைபவனியில் கலந்துகொண்டதற்காக சிலரை சிறைப்படுத்தினர். தற்பொழுது நடைபெறவுள்ள 65 ஆவது மாநாட்டுக்குப் பின்னர் எத்தனை பேரை சிறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்களோ தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -