எஸ். அஷ்ரப்கான்-
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட, சேவை மூப்பு அடிப்படையில் அதற்கு 852 பேர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சைகளை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த ஜுலை மாதம் 10ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் வினாப்பத்திரம் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளமையால் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாக குறித்த பரீட்சார்த்திகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மண்டபத்தில் இடம் பெறும் பரீட்சை வினாத்தாள் முகநூலில் வெளியிடப்படுவது குறித்து அரசாங்கம் மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் ஆகியவை குறித்த முகநூல் பாவனையாளரை இனங்கண்டு இவ்விடயத்தில் நீதியினை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இது விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் உடனடியாக செயற்பட்டு பிரஸ்தாப பரீட்சார்த்திகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.