புனித தலமான கதிர்காமத்தில் வயோதிப புத்த பிக்கு ஒருவர் சிறுமி ஒருவரிடம் கீழ்தரமான முறையில் நடந்துகொள்ளும் காட்சி பதிவானது.
கதிர்காமம் ஏழுமலை கோயிலுக்கு செல்லும் படிவரிசையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் காலை, வயோதிப பிக்கு ஒருவர் காலால் சுரண்டுவதும் அதற்கு அந்த பெண் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிற்பதும் காணொளியில் பதிவானது.
பெண்ணின் உறவினர்கள் குறித்த பெண்ணை அழைத்த போதும் தான் சிறிது நேரம் இவ்விடத்தில் இருந்துவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கதிர்காம கந்தன் ஆலயத்தின், ஆடிவேல் விழா ஜூலை மாதம் 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானதோடு இம் மாதம் 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.