கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் நாமல் ராஜபக்ஸவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஒரு நாளில் மூன்று விருந்தினர்கள் மாத்திரம் கைதி ஒருவரை சந்திக்க முடியும். ஆனால் நாமலை ஏராளமானோர் சந்தித்து செல்கின்றனர். கைதிகள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த முடியாது. ஆனால் நாமல் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நாமலுக்கு படுத்து உறங்க மெத்தை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் சிறைச்சாலையை வந்து பார்க்க முடியும் என்பதாலேயே நாமலை சந்திக்க வருகின்ற எம். பிகளை மட்டுப்படுத்த முடியாது இருப்பதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.