றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா சேனாநாயக்க எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றவியல் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.