வெறிச்சோடியது பல்கலைக்கழகம்.!

எம்.வை.அமீர் -
ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் தொடர் வேலைநிறுத்தத்தின் இரண்டாம் நாளான (2016-07-28) ஆம் திகதியும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்திலும் அங்கு கடமையாற்றும் கல்விசார ஊழியர்களால் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த பணிப்பகிஸ்கரிப்பினால் மாணவர்களின் வருகை அரிதாக இருந்ததுடன் கல்விநடவடிக்கைகள் இடம்பெறாததன் காரணமாக பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இங்கு கருத்துத்தெரிவித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பிரதி நிதி ஏ.றிபாயிஸ் முகம்மட் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்களில் கூட்டு அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானது என்றும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -