பாடசாலைகளிலுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு 7500 ரூபாவை வாழ்க்கைச் செலவாக வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி அமைச்சுக்கு முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து, கல்வி அமைச்சருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானத்தை கல்வி அமைச்சர் அறிவித்ததாக அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.