எம்.எப்.எம்.பஸீர்-
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடையது என நம்பப்படும் 10 இறுவட்டுக்களை பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவு கொழும்பு மேலதிக நீதிவானிடம் நேற்று கையளித்துள்ளது.
பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் டி.பி. கம்லத் இதனை அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.என்.டி.ஜி.பி. செனவிரத்ன ஊடாக இதனை கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் கையளித்துள்ளார்.
கடந்த 2012.05.16 ஆம் திகதி நள்ளிரவு 11.00 மணிக்கும் 2012.05.17 ஆம் திகதி அதிகாலை 2.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, கிருளப்பனை சந்தி, நாரஹேன்பிட்டி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் பதிவான வீடியோக்களே இவ்வாறு 10 இறுவட்டுக்களாக மன்றில் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரு சி.டி.க்களும் 8 டி.வி.டி.க்களும் உள்ளடங்குகின்றன.
முன்னதாக கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் சிறப்பு அறிக்கையொன்றினை தாக்கல் செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி கடந்த 2012.05.19 ஆம் திகதியன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்க, தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுப்பதால் 2012.05.16 ஆம் திகதி நள்ளிரவு 11.00 மணிக்கும் 2012.05.17 ஆம் திகதி அதிகாலை 2.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, கிருளப்பனை சந்தி, நாரஹேன்பிட்டி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் பதிவான வீடியோக்களை பாதுகபபாக வைக்குமாறு அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அப்போதைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் (தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர்) டி.ஆர்.எல். ரணவீரவின் கையெழுத்துடன் சி.சி.ரி.வி. பிரிவின் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பட்டுள்ளது.
இந் நிலையில் சி.சி.ரி.வி. பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சோம திலக என்பவர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கோரிய கலப்பகுதிக்குரிய குறித்த இடங்க்ளின் சி.சி.ரி.வி. பதிவுகளை 4 சி.டிக்களில் அபோதே கையளித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சி.சி.ரி.வி. பதிவுகள் அப்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அந்த சி.டி. க்கள் நான்கும் பெறப்படும் வரை அவை உரிய முரையில் பராமரிப்புச் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தமையும், குற்றத் தடுப்புப் பிரிவு கோரிய சி.சி.ரி.வி. பதிவுகளின் கால அளவினையும் வைத்து பார்க்கும் போது பாரிய சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
எனவே குரித்த காலப்ப்குதிக்குரிய சி.சி.ரி.வி. பதிவுகளை வெவ்வேறாக மன்ரில் சமர்பிக்க பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவுக்கு உத்தர்விடவேண்டும் என அந்த அறிக்கையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியது.
அதற்கு அமைவாக அவற்ரை சமர்பிக்க நீதிமன்ரம் உத்தரவும் பிரப்பித்துள்ளது. இந் நிலையிலேயே நேற்று புதிதாக 10 இறுவட்டுக்கள் நீதிமன்றில் சமர்பிக்கப்ப்ட்டுள்ளன.
கடந்த 2012.05.17 ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டி சாலிகா மைதான மதிலுடன் மோதிய நிலையில் எரிந்துகொன்டிருந்த காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.