கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை - முதலமைச்சர் நசீர்

நேற்று மாலை கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த சுவிஸ்லாந்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் ஹெயின்ஸ் வோல்கர் நெதர்கூன் முதலமைச்சரைச் சந்தித்து கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்தி சம்மந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு சுவிஸ்லாந்து பாரிய உதவிகளைச் செய்யும் என்று முதலமைச்சரிடம் தெரிவித்த உயர்ஸ்தானிகர் சம்பூர் மக்களின் குடியேற்றம் சம்மந்தமாகவும் அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஏனையவற்றுக்கும் உதவிகள் செய்வதாகவும் குறிப்பிட்டதுடன் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கான விமான சேவையினை வாரத்தில் மூன்று நாட்கள் நீடிப்பதற்கான உதவியினைச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இச்சந்திப்பில் மாகாணக் கல்வி அமைச்சர் சிங்காரவேல் தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களுடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -