ஹாபிஸ் நசீரின் செயற்பாடு படைவீரர்களை இழிவுபடுத்தும் செயலாகும் – மஹிந்த

கிழக்கில் இடம்பெற்ற சம்பவம் மீளவும் இடம்பெறக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவமானது படைவீரர்களை இழிவுபடுத்தும் செயற் திட்டத்தின் ஓர் கட்டமாகும். எந்தவொரு தரப்பு அரசியல்வாதி என்றாலும் படைவீரர்களை இவ்வாறு பேசக் கூடாது.

யாழ்ப்பாணத்தில் முகாம் ஒன்றிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்து மீறி பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சிக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை நிகர்ப்படுத்தலாம்.

இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறாமல் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -