சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்...!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை (2016.05.27) பேரணியொன்று இடம்பெற்றது.

நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக எரிவாய்வு (Natural Liquidate Gas) மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் இவ்வேளையில் இந்திய அரசாங்கத்தை இவ்விடயத்தில் அதின கரிசனை காட்டுமாறு வலியுறுத்தியே இப்பேரணி இடம்பெற்றது.

இப்பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜே.எம்.லாஹீர் - சிரேஷ்ட சட்டத்தரணி உட்பட தோப்பூர் அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அமைதியான முறையில் அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளனர் என பேரணியை ஏற்பாடு செய்துள்ள மூதூர் பசுமைக்குழு அமைப்பு தெரிவித்துள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -