தந்தையின் விருப்பத்திற்கமைய கிராம சேவகராக பணியாற்றினேன் - ஜனாதிபதி

மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பரந்துபட்ட சேவைகளை வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கிராம சேவகர்களுக்கு சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கலாசாரத்தில் கிராமத்தை அடிப்படையாக கொண்ட கிராமிய தலைவர்கள் தொடர்பில் எமக்கு வரலாற்று சிறப்புமிக்க பின்னணி உள்ளது.

சமூக வணிகமயமாக்கப்படுவதற்கு முன்னர், தொழிற்நுட்பம் வளராத காலத்தில் கிராமங்களில் ஐக்கியம், ஒழுக்கம் போன்ற மனித விழுமியங்களை கிராமத்தை அடிப்படையாக கொண்ட தலைவர்களே பாதுகாத்தனர்.

கிராமத்து விகாரையின் பிக்குகள், கிராம பாடசாலையின் அதிபர், கிராம மருத்துவர், கிராம விதானயார் ஆகிய சிலரே கிராமத்தை முழுமையாக வழிநடத்தினர்.

இவர்கள் கிராமங்களின் குணநலன்களையும் நல்லொழுக்கத்தையும் முழுமையாக பாதுகாத்தனர்.

எனது தந்தை கிராமத்து விதானயார். அவர் வகித்த அந்த பதவியில் ஒரு நாளாவது நான் இருக்க வேண்டும் என தந்தை விரும்பினார்.

தந்தையின் விருப்பத்திற்கு அமைய நான் கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பித்தேன். ஆனாலும் சிறிது காலமே நான் கிராம சேவகராக பணியாற்றினேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -