நாங்கள் முஸ்லிம்கள் மற்றும் இலங்கையர் என்ற அடையாளம் குறித்து யோசிக்கும் போது எங்களில் பலருக்கு பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. கலாச்சாரம் அல்லது மதம் என்பவற்றுடன் தேசிய அடையாளம் அங்கீகரிக்கப்படுகின்றதா?. ஒரு தேசிய அடையாளத்தை நிறுவுவதில் மதம் அல்லது கலாச்சாரம் அல்லது இரண்டும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதால் கேள்வி எழுகிறது. பல்கலாசார அடையாளம் பல மனித நடத்தைகளில் இருந்து உருவானதாகும் .
இலங்கை முஸ்லிம்;
அடையாளம் என்றால் என்ன? இலங்கையில் எங்களுள் சிலர் அரபுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனரா? நாம் வெள்ளை ஜுப்பா மற்றும் கறுப்பு அபாயா என்பவற்றுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, ஆனால் அரபு கலாச்சாரத்துடன் அவற்றுக்கு சம்பந்தம் உண்டு என்று எம்மால் சொல்ல முடியுமா? அரபுக் கலாசாரம், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக இலங்கை முஸ்லிம்கள் சிலரின் மீது செல்வாக்கை செலுத்தி வருகிறது. இது முஸ்லிம்கள் அல்லாத பெரும்பான்மை மக்களை அச்சம்கொள்ள வைக்கிறது.
உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் ஒரே விதமாக உடை அணிவதில்லை. ஆனால் அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் தமது தேசியத்தை உரிமை கோருவதற்கு ஒரு பொதுவான தேசிய உடை அவசியமாகும். நாம் முழுமையா அரேபியர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டுமா அல்லது அந்த நிலையை மாற்றி நாம் முஸ்லிம்கள் மற்றும் நாம் இலங்கை முஸ்லிம்கள் என்பதை காட்ட வேண்டுமா?
இஸ்லாம் பற்றிய ஒரு தவறான உணர்வு உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள், அவர்கள் முஸ்லிம்கள் என்று சொல்லும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உதாரணங்களை கருத்தில் எடுத்தால், உலகம் இந்த மதத்தைப் புரிந்துகொள்வதிலும் மதிப்பிடுவதிலும் பிரச்சினக்குள்ளாகி உள்ளது என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. நாம் பார்ப்பவை மற்றும் கேட்பவை என்பவற்றினால் பெரிதும் தாக்கமுறும் உயிரினங்கள் ஆகும்.
துரதிருஷ்டவசமாக, இஸ்லாத்தைப் பின்பற்றும் பெரும்பான்மையான மக்கள், அல்லாஹ், குர்ஆனில் கற்று கொடுத்த முறையில் மதத்தை பின்பற்றுவதில்லை. அவர்கள் தவறான சித்தாந்தங்களையும்; அல்லாஹ்விடமிருந்து வந்த போதனைகளுக்கு முரணான, சவால் விடும் வகையில் மதத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட மத சட்டங்களையும் போலி சித்தாந்தங்களையுமே பின்பற்றுகின்றனர்.
மதம்; சிக்கலானதாகவும் கடினமானதாகவும்; ஆகியமைக்குக் காரணம் இதுவேயாகும். அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு வழங்கப்பட்ட வழியில் மதத்தைப் பின்பற்றுவதன் மூலம், இஸ்லாம் மதம் எளிமையானதாகவும் சமநிலையானதாகவும் ஆகிறது.
முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் அதேமக்களால் உருவாக்கப்பட்ட தவறான கருத்துகள் ஊடாக ஒருமுறை பார்த்ததும் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும்; உண்மையான இஸ்லாத்தை யாராலும் மதிப்பீடு செய்ய முடியும். அது ஆரம்பமாகிய சிறிது காலத்திலேயே, 1200ஆம், 1400ஆம் ஆண்டுகளுக்கு இடையே, உண்மையான இஸ்லாமிய மதம் தொலைந்து போய்விட்டது. இது நம்பமுடியாததாக இருக்கலாம், ஆனால் முஸ்லிம்கள் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்ட அதே வேத நூல் (குர்ஆன்) மூலமே அதனைத் தெளிவுபடுத்த முடியும்.
முஸ்லிம்கள் பெரும்பாலும் அல்லாஹ் மூலம் அதிகாரமளிக்கப்படாத ஒரு மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட மதத்தின் அடிப்படையிலேயே அனைத்து காரியங்களையும் செய்கின்றனர் என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்களைக் குர்ஆன் காட்டித் தருகிறது. இது குர்ஆன் போதனைகளுக்கு நேர்மாறானது '.
இலங்கை முஸ்லிம் அடையாளம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது? அது எல்லா பிரஜைகளுக்கு மட்டுமான ஒரு கேள்வி அல்ல, ஆனால் அது இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு கேள்வியும் கூட. இஸ்லாத்தின் பெயரரல் பெரிய பிரிவுகளும்; சிறிய பிரிவுகளும்; உள்ளன.
யார் இதனைத் தீர்ப்பது? ஒவ்வொரு குடிமகனும் இதனை அறிய விரும்புகிறான். அவன் அல்லது அவள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு அங்கம் மற்றும் சமமான பிரஜைகளுள் ஒருவன் மற்றும் விளக்கங்களில் குழப்பமில்லாமல் கண்டிப்பாக குர்ஆன் மற்றும் ஹதீஸை நேரடியாகப் பின்பற்றுபவர்; எனப் பிரகடனம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
அது ஒரு உம்மா. மேலே காட்டப்பட்ட மற்றவை கழகங்கள் ஆகும். சில கழகங்கள் சேர்க்கப்பட வேண்டும்; வேறு சில கழகங்கள் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் குடிமகனாக இருக்க முடியும் ஆனால் பலர் முஸ்லிம் உம்மாவைப் பிரதிநிதித்துவம் செய்யாதவர்களாக இருக்கலாம். முஸ்லிம்கள் இஸ்லாததையும், நபிவழியையும் பின்பற்ற வேண்டும். அதில் தீவிரவாதம், பயங்கரவாதம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் எந்த தவறன விளக்கங்கள் எதுவுமே இல்லை. நாம் நிர்மாணிக்கப் போவது முஸ்லிம் உம்மாவா அல்லது முஸ்லிம் கழகங்களா?
ஹில்று.

