கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்..!

ப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று காலை வேளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 500 மாணவர்கள் வரை கலந்துகொண்டுள்ளனர்.

சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் 276 மாணவர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளும் எடுக்காதமையால் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் 100இற்கு 10% மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினாலும் இதுவரை மாணவர்களுக்கான இடஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு பதிலாக 100இற்கு 35% மாக மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இன்றைய தினம் சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -