இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் விளையாட்டுத்துறையின் பங்களிப்பு மிகையாகாது – பிரதி அமைச்சர் ஹரீஸ்

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி புதன்கிழமை (02) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் வீ. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கையில்,

விளையாட்டுத்துறையில் எமது பிரதேச மாணவர்கள்; பிரகாசித்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களைப் பெற்று பாடசாலைக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் புகழைத் தேடிக்கொடுப்பவர்களாக மாறவேண்டும்.

விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விஷேட பயிற்சிகள், உபகரணங்கள் மற்றும் மேலதிக வசதி வாய்ப்புக்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றேன். எமது மாவட்டம் விளையாட்டுத்துறையில் சாதிக்க முழு வீச்சளவில் செயற்படுகின்றேன்.

இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் விளையாட்டுத்துறையின் பங்களிப்பு மிகையாகாது. இன்று தமிழ், முஸ்லிம் நல்லுறவை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் தான் எமது இரு சமூகங்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

அரசியல் யாப்பு திருத்த யோசனை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் விரிவாக பேசி வருகின்றது. இதன் மூலம் இரு சமூகங்களின் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன், ரீ.கலையரசன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.

நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 587 புள்ளிகளைப் பெற்று தில்லையம்பலம் இல்லம் இவ்வருடத்திற்கான சம்பியனானது. 532 புள்ளிகளைப் பெற்று வில்ஷன் இல்லம் இரண்டாம் இடத்தையும், 437 புள்ளிகளைப் பெற்று நல்லதம்பி இல்லம் மூன்றாம் இடத்தையும் 388 புள்ளிகளைப் பெற்று யோகம் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.

இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -