62 வருட சண்முகா வரலாற்றில் சோவனா 9ஏ பெற்று கன்னிச்சாதனை!

காரைதீவு நிருபர் சகா-

காரைதீவு சண்முகா மகா வித்தியலாயத்தின் 62வருடகால வரலாற்றில் க.பொ.த.சா.தபரீட்சையில் 9ஏ பெற்றதன்மூலம் செல்வி.மகேந்திரன் சோவனா கன்னிச்சாதனைபடைத்து வரலாறுபடைத்துள்ளார்.

கல்முனை வலயத்தின் காரைதீவுகோட்டத்திலுள்ள மிகச்சிறந்த 1சி மாதிரிப்பாடசாலையான இப்பாடசாலையில் க.பொ.த. சா.த. வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 22வருடங்களாகின்றன.

பாடசாலை அதிபர் இராஜரெத்தினம் ரகுபதி தகவல்தருகையில் ஒட்டுமொத்த பாடசாலை வரலாற்றில் 9பாடங்களிலும் ஏ சிறப்புச்சித்தி பெற்றிருப்பது இதுவே முதல்தடவையாகும்.

செல்வி மகேந்திரன் சோவனா அந்த வரலாற்றுச்சாதனையாளர்.அவரை எமது பாடசாலைச்சமுகம் வாஞ்சையோடு பாராட்டுகிறது.இதற்காக உழைத்த அனைவரையும் இவ்வண் நன்றிகூருகின்றேன் என்றார்.

கல்முனை வலயக் கல்விபப்ணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இம்மாணவியையும் அதிபர் ஆசிரியர் குழாத்தினரையும் பெற்றோரையும் கல்விச்ச முகத்தையும் பாராட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -