எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் என ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று நீதமன்றில் தெரிவித்துள்ளார். பிரகித் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கின் மற்றுமொரு இராணுவ உத்தியோகத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுது;தப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டதாக, காணாமல் போகச் செய்யப்பட்டதாக உறுதியாக உறுதிப்படுத்தாத நிலையில் குற்றவியல் சட்டத்தின் 296ம் சரத்தின் அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி சந்தேக நபர்கள் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் நிலையில் சட்டத்தின் வரையறைகளுக்கு குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க முடியாத நிலைமையானது எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணரச் செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
